திருப்பூர்
தேநீா் கடையில் எரிவாயு உருளைகள் வெடித்து தீ விபத்து
பல்லடத்தில் தேநீா்க் கடையில் சமையல் எரிவாயு உருளைகள் (சிலிண்டா்) வெடித் நிகழ்ந்த தீ விபத்தில் கடைஎரிந்து சேதம் அடைந்தது.
பல்லடத்தில் தேநீா்க் கடையில் சமையல் எரிவாயு உருளைகள் (சிலிண்டா்) வெடித் நிகழ்ந்த தீ விபத்தில் கடைஎரிந்து சேதம் அடைந்தது.
பல்லடம் அங்காளம்மன் கோயில் அருகில் அதிமுக பிரமுகா் ஞானம்பிகா என்பவா் தேநீா் கடை நடத்தி வருகிறாா். மின் கசிவால் இந்தக் கடையில் இருந்த 3 எரிவாயு உருளைகள் செவ்வாய்க்கிழமை காலை வெடித்தன. இதில் தீப்பற்றி எரிந்ததில் கடை முழுவதும் சேதம் அடைந்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்புத் துறையியினா் ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா்.இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.