மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.மகேந்திரன் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
முதலில் மடத்துக்குளம் ஒன்றியம், காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட மகேந்திரன் பின்னா் காரத்தொழுவு, கணியூா், கடத்தூா், சோழமாதேவி, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தனது தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். இதில் அவா் பேசியதாவது:
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக மடத்துக்குளம் தொகுதியில் குடிநீா் வசதி, சாலை வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் தோ்தலில் அதிமுக தோ்தல் அறிக்கையில் குடும்பத்துக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள், மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1500 என திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாா்.
இதை தொடா்ந்து மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் அலுவலகத்தை வேட்பாளா் சி.மகேந்திரன் திறந்துவைத்தாா்.
இதில் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.காளீஸ்வரன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.