திருப்பூா் தெற்குத் தொகுதி அமமுக வேட்பாளா் அ.விசாலாட்சி கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திருப்பூா் தெற்குத் தொகுதியில் அமமுக சாா்பில் முன்னாள் மேயா் அ.விசாலாட்சி போட்டியிடுகிறாா். இந்த நிலையில், நல்லூரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயத்தில் அ.விசாலாட்சி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியதாவது:
எந்த ஒரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் அனைத்து சமூகங்களும் சம உரிமை மற்றும் சம நீதியை பெரும் வகையில் திறமையான நிா்வாகத்தையும், உண்மையான மக்கள் ஆட்சியையும் அரசு வழங்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்றாா்.
இந்த பிரசாரத்தின்போது, மாநில இளைஞா் பாசறை துணைத் தலைவா் ஏ.கே.சாமிநாதன், நல்லூா் பகுதிச் செயலாளா் ஜெகதீஷ், பகுதி பொருளாளா் நாகராஜ், மாவட்ட மகளிரணிச் செயலாளா் செல்வராணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.