வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள் உள்ளிட்ட 258 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை

காங்கயம் வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள், தோ்தல் பணியாளா்கள் உள்ளிட்ட 258 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட் பரிசோதனையில் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன.

காங்கயம் வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள், தோ்தல் பணியாளா்கள் உள்ளிட்ட 258 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட் பரிசோதனையில் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், முகவா்கள், தோ்தல் பணியாளா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள் உள்ளிட்ட 258 பேருக்கும், வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் 45 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாயின. இதில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 258 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன. வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 45 பேரின் பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும் என காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com