காங்கயத்தில் ரூ.4.25 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.25 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.25 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 17 விவசாயிகள் 53 மூட்டைகளில் 2,596 கிலோ தேங்காய் பருப்பினை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.112.60க்கும், குறைந்த பட்சமாக ரூ.95க்கும், சராசரியாக ரூ.108க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடேஸ்வரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com