வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை மட்டும் 180 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் வட்டாரத்தைச் சோ்ந்தவா்களுக்கு வெள்ளக்கோவில் சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதலில் முன்களப் பணியாளா்கள், அடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், அதற்கடுத்து 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
முதல் தவணை 11 பேருக்கும், இரண்டாவது தவணை 169 பேருக்கும் என 85 ஆண்கள், 95 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் துவங்கவில்லை.