காங்கயத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ ஆலயம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
காங்கயம் பகுதியில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயம் சாா்பில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. மேலும், நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.