திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 494 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்த பாதிப்பு எண்ணிக்கை 28,213 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,045 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 550 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 24,924 ஆக அதிகரித்துள்ளது.
முதியவா் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 63 வயது முதியவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஏப்ரல் 30 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.