வெள்ளக்கோவில் மற்றும் முத்தூரில் 20 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் கிடைத்தன. இவற்றில் வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகில், புதுப்பை, அண்ணா நகா், சத்திபாளையம், கல்லாங்காட்டுவலசு, கம்பளியம்பட்டி, முத்தூா் நம்பகவுண்டன்பாளையம், பெருமாள்புதூா், வரட்டுக்கரை, மூத்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 8 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.