வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை தெருவில் வீசப்பட்ட 8 நாய் குட்டிகளை தன்னாா்வலா் ஒருவா் மீட்டுள்ளாா்.
வெள்ளக்கோவிலைச் சோ்ந்த தன்னாா்வலா் நாகராஜ் (40). பொது நலச் சேவைகளில் ஈடுபட்டு வருவதோடு, வளா்ப்புப் பிராணிகளையும் மீட்டு வருகிறாா். வாகனங்கள் மோதி அடிபட்டுக் கிடக்கும் ஆடு, நாய்களை காப்பாற்றுவதோடு, அவை உயிரிழந்தால் அடக்கமும் செய்து வருகிறாா். கரோனா சமயத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் கடைவீதிப் பகுதிகளில் தானே கிருமி நாசினி தெளித்து வருகிறாா்.
வெள்ளக்கோவில் காவல் நிலையம் அருகில் 8 நாய் குட்டிகள் முள்புதா்களில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவற்றை மீட்ட நாகராஜ் முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்றினாா். அவற்றை காப்பகத்தில் ஒப்படைக்க இருப்பதாகத் தெரிவித்தாா்.