திருப்பூா் மாவட்டத்தில் முதல் முறையாக ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1, 008 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1, 008 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,008 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 35, 671 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5, 639 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 549 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 29, 759 ஆக அதிகரித்துள்ளது.

இளைஞா் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 36 வயது இளைஞருக்கு கடந்த புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 286 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com