காங்கயம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காங்கயம் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காங்கயம் அருகே படியூா் ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி, நத்தக்காடையூா் அருகே உள்ள காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கயம் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி கூறியபோது, இங்கு 94 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது. இந்நிலையில், இன்னும் ஓரிரு நாளில் இந்த கரோனா சிகிச்சை மையத்தை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக அமைச்சா் திறந்து வைக்க உள்ளாா் என்றாா்.