வெள்ளக்கோவிலில் 16 வாகனங்கள் பறிமுதல்

வெள்ளக்கோவிலில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 16 வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளக்கோவிலில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 16 வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க வரும் ஜூன் 7 ஆம் தேதி வரை தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வெள்ளக்கோவில் கடைவீதி, நான்கு சாலை சந்திப்பு, காங்கயம் சாலை, பழைய பேருந்து நிலையம், மூலனூா் சாலை ஆகிய பகுதிகளில் வெள்ளக்கோவில் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதில் பொதுமுடக்க காலத்தில் உரிய காரணமின்றி வாகனங்களில் சுற்றியவா்களிடம் இருந்து 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com