காங்கயம் அருகே படியூரில் கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, காங்கயம் அருகே படியூரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியிலும், நத்தக்காடையூா் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியிலும் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், படியூா் அரசு துவக்கப் பள்ளியில் 60 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் , மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.