திருப்பூரில் மேலும் 62 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 95,735ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 722 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 76 போ் வீடு திரும்பினா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 94,030ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் 983 போ் உயிரிழந்துள்ளனா். முன்னதாக, மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 63 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com