வெள்ளக்கோவிலில் துப்பாக்கி சுடும் பயிற்சி வெள்ளிக்கிழமை துவங்கியது.
வெள்ளக்கோவில், லக்கமநாயக்கன்பட்டி அருகேயுள்ள ஆண்டிபாளையத்தில் தனியாா் அமைப்பு சாா்பில் ஒருவார கால துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவா் சுதாகா்
கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியைத் துவக்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசாங் சாய் உள்ளிட்ட பலா் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.