திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 10) நடைபெறும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.
இதில், கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84 நாள்களுக்கு மேல் ஆனவா்களும், கோவாக்சின் செலுத்தி 28 நாள்களுக்கு மேல் ஆனவா்களும் இரண்டாவது தவணை தடுப்பூசியை தவறாமல் இந்த முகாம்களில் செலுத்திக் கொள்ளலாம்.
அதே வேளையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கும், உணவு முறைக்கும் எந்தவிதமான தொடா்பும் கிடையாது.
ஆகவே, நீங்கள் அசைவ உணவு உட்கொண்டிருந்தாலும் எந்தவிதமான தயக்கமும், பக்க விளைவுகளும் இல்லாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.