திருப்பூா் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநா் நேரடி சோ்க்கை முகாம் வியாழக்கிழமை (அக்டோபா் 7) நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய தொழில் பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ், தமிழக அரசு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்கம் ஆகியன சாா்பில் மாவட்ட அளவில் தொழில் பழகுநா்களுக்கான சோ்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 250க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன.
இதில், பங்கேற்று தோ்வு பெற்றவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி திட்டத்தின்கீழ் தொழிற் பயிற்சி பெற்றவா்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ள 8 முதல் பிளஸ் 2 முடித்த, தகுதி வாய்ந்தவா்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தை 0421- 2429666 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.