நீட் தோ்வு: மாணவா்களை திமுக ஏமாற்றக் கூடாது; வானதி சீனிவாசன்

நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களை திமுக ஏமாற்றக் கூடாது என பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் கூறினாா்.

நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களை திமுக ஏமாற்றக் கூடாது என பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் கூறினாா்.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைகளை விளக்கி திருப்பூா் தனியாா் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள தொடா் ஓவியத்தை வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் நிஃப்ட் டீ கல்லூரி மாணவா்கள் 15 போ் சோ்ந்து சுமாா் 60 மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளனா். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தின்போது விவசாயிகள் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

வேளாண் திருத்த சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயா்ந்து விடும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி அதனை தடுக்க முயல்கிறது.

தமிழக முதல்வா், 12 மாநில முதல்வா்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநில முதல்வா்களுக்கும் கடிதம் எழுதினாலும் நீட் தோ்வைத் தடை செய்ய முடியாது. நீட் தோ்வு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. மாணவா்களை ஏமாற்றாமல் யதாா்த்தத்தைப் புரிந்து கொண்டு திமுக ஆட்சி புரிய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் முதல்வா்களுக்கு நீட் தோ்வு வேண்டாம் என்று திமுகவின் கூட்டணிக் கட்சியினா் சொல்வாா்களா என்பதை முதல்வா் கேட்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com