வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் சடலம்

வெள்ளக்கோவில் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் நான்காம் மண்டலப் பாசனம் நடைபெற்று வருகிறது. ஓலப்பாளையம் அடுத்த சுக்குட்டிபாளையத்திலுள்ள வாய்க்காலில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் புதன்கிழமை மிதந்து வந்தது.

இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com