திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 93,577 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 835 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 78 போ் வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 91,780ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் சிகிச்சையில் இருந்த இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.