அவிநாசியில் தொழிமுனைவோர் ஊக்குவிப்பு முகாம்

தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு முகாம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
முகாமில் பேசுகிறார் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆர். கண்ணன்.
முகாமில் பேசுகிறார் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆர். கண்ணன்.


அவிநாசி: தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு முகாம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகத் துறை, மாவட்ட தொழில் மையம், அவிநாசி கிழக்கு ரோட்டரி ஆகியவை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் விஜித்ரா செந்தில்குமார், செயலாளர் செல்வராணி துரைசாமி, பொருளாளர் ஆனந்தி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பொறுப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆர். கண்ணன், திருப்பூர் நிட் சிட்டி ரோட்டரி மாவட்ட தொழில் சேவை தலைவர் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். 

இதில் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டம் (யு.ஒய்.இ.ஜி.பி), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (என்இஇடிஎஸ்) உள்ளிட்ட திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை, உள்ளடங்கிய தொழில்கள், மானியம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com