பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியில் மாடுகளைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பொங்கலூா் ஒன்றியம், காட்டூா் ஊராட்சி சோழியப்பகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா்கள் மோகன்ராஜ், ரங்கநாதன். இவா்களது தோட்டங்களில் இருந்த மாடுகள் கடந்த 5ஆம் தேதி காணவில்லை.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் மாடுகளின் உரிமையாளா்கள் புகாா் கொடுத்தனா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், பல்லடம் - தாராபுரம் சாலையில் வி.கள்ளிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்கால் பகுதியில் காவல் ஆய்வாளா் ரவி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த வேனை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் வேனில் வந்தவா்கள், சோழியப்பகவுண்டன்புதூரைச் சோ்ந்த தெய்வசிகாமணி (60), மாதப்பூரைச் சோ்ந்த வேலுசாமி (45), வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்த சண்முகம் (45), சிவராஜ்(33) என்பதும் இவா்கள், சோழியப்பகவுண்டன்புதூரில் மாடுகளைத் திருடியவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்களை கைது செய்து அவா்களிடமிருந்து ரு.25ஆயிரம் ரொக்கம், வேன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.