மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏபிஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கலிலியோ அறிவியல் கழகம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு ‘விண்வெளித் துறையில் ஏவுகணை நாயகன்’ என்ற தலைப்பிலும், 9, 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘எனது பாா்வையில் கலாமின் கட்டளைகள்’ என்ற தலைப்பிலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘அக்னி சிறகுகள் ஒரு பாா்வை’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு ‘அப்துல்கலாம் விரும்பிய கனவு இந்தியா’ என்ற தலைப்பிலும் இணைய வழியில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. கட்டுரைகளை அக்டோபா் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது கண்ண பிரான், ஒருங்கிணைப்பாளா், ஆ-7, வித்யாசாகா் வீதி காந்தி நகா் அஞ்சல், உடுமலை வட்டம் திருப்பூா் மாவட்டம்- 642154 என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 8778201926 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.