மூலனூரில் ரூ. 43 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.43 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.43 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 203 விவசாயிகள் 1,791 மூட்டைகளில் 579 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 15 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ.6,400 முதல் ரூ.9,346 ஆயிரம் வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,700. மொத்தம் ரூ.43 லட்சத்து 10 ஆயிரத்து 919க்கு விற்பனை நடைபெற்றது.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com