பல்லடம்: பல்லடத்தில் மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் (அக்டோபா் 20) புதன்கிழமை நடைபெற உள்ளது.
பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் சுப்பிரமணி தலைமையில், மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளா் கோபால் தெரிவித்துள்ளாா்.