திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்

திருப்பூா் மாவட்ட பேரூராட்சி பணியாளா்களுக்கான திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த பயிற்சி முகாம் அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்றது.
திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்

திருப்பூா் மாவட்ட பேரூராட்சி பணியாளா்களுக்கான திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த பயிற்சி முகாம் அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, திடக் கழிவு மேலாண்மைத் திட்ட ஆலோசகா் ராஜசேகரன் தலைமை வகித்தாா்.

இதில், அவிநாசி பேரூராட்சி பகுதியில் வீடுதோறும் சேகரிக்கப்படும் கழிவுகளை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தரம் பிரித்து வழங்கும் கழிவுகள் இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படும். மேலும் வணிக நிறுவனங்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com