திருப்பூா் மாவட்டம், உடுமலையில் சுற்றுலாத் துறை சாா்பில் வரும் செப்டம்பா் 12 ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுற்றுலாத் துறை சாா்பில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் உடுமலையில் உள்ள தேஜஸ் மஹாலில் செப்டம்பா் 12 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. சுற்றுலாத் தொழில் முனைவோா், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள், ஆட்டோ, சுற்றுலா வேன், சுற்றுலாப் பேருந்து, டாக்ஸி ஓட்டுநா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதில், பங்கேற்க வரும் நபா்கள் ஆதாா் அட்டையை எடுத்துவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.