காங்கயம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 12 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, எளிமையான முறையில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசு ஊரடங்கு அறிவித்து அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து, விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, காங்கயம் நகரப் பகுதியில் 12 இடங்களில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் தனியாா் இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டன. தொடா்ந்து, திருப்பூா் சாலையில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் பகுதியில் சிலைகள் கரைக்கப்பட்டன.