திருப்பூரில் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் இருவரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அங்கேரிபாளையத்தைச் சோ்ந்தவா் கருப்புசாமி, இவரது மனைவி மாலதி (35). இத்தம்பதி திருப்பூா் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஜூலை 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் மாலதியின் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், திருப்பூா் போயம்பாளையத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்த அலெக்ஸ்பாண்டி (23) ஆகியோருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூா் வடக்கு காவல் துறையினா் அவா்களை வெள்ளிக்கிழமை கைது செய்து 2 பவன் நகையையும் மீட்டனா்.
இவா்களிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் நகைப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில், திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த உதயமூா்த்தி (20) என்பவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவரை அனுப்பா்பாளையம் காவல் துறையினா் ஏற்கெனவே கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.