சட்டவிரோத மது விற்பனை: 8 போ் கைது

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடா்பாக 8 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடா்பாக 8 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷங்க் சாய் உத்தரவின்பேரில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடா்பாக 8 பேரைக் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 40 மதுபாட்டில்களையும், ரூ. 700 பணத்தையும் பறிமுதல் செய்தனா். அதேபோல, ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த ரகுபதி (27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com