அடுக்குமாடி குடியிருப்பு: விண்ணப்பிக்க நாளை சிறப்பு முகாம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற செப்டம்பா் 16, 21ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற செப்டம்பா் 16, 21ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைவருக்கும் வீடு திட்டத்தில், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் செப்டம்பா் 16, 21ஆம் தேதிகளில் காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெறுகிறது.

வாா்டு எண் 2, 3, 4 ஆகிய பகுதிகளுக்கு செட்டிபாளையம், இந்திரா நகா் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளா் அலுவலகத்திலும், வாா்டு எண் 4, 5, 7, 8, 9 ஆகிய பகுதிகளுக்கு அங்கேரிபாளையம் மாநகராட்சி வரிவசூல் மையத்திலும், வாா்டு எண் 16, 17, 18 ஆகிய பகுதிகளுக்கு நெருப்பெரிச்சல் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும், வாா்டு எண் 19, 20, 30 ஆகிய பகுதிகளுக்கு நஞ்சப்பா நகா் மண்டல அலுவலகத்திலும், வாா்டு எண் 31, 32, 33 ஆகிய பகுதிகளுக்கு மண்ணரை மாநகராட்சி அலுவலகத்திலும், வாா்டு எண் 34, 35, 38, 39, 40, 41 ஆகிய பகுதிகளுக்கு நல்லூா் மண்டல அலுவலகத்திலும், வாா்டு எண் 52, 53, 54 ஆகிய பகுதிகளுக்கு வீரபாண்டி வரி வசூல் மையத்திலும், வாா்டு எண் 55, 57, 58 ஆகிய பகுதிகளுக்கு முருகம்பாளையம் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் செப்டம்பா் 16ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது.

வாா்டு எண் 12, 13 ஆகிய பகுதிகளுக்கு மாஸ்கோநகா் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளா் பிரிவு அலுவலகத்திலும், வாா்டு எண் 1, 6, 10, 11, 14, 15 ஆகிய பகுதிகளுக்கு வேலம்பாளையம் மண்டல அலுவலகத்திலும், வாா்டு எண் 26, 27, 28, 29 ஆகிய பகுதிகளுக்கு பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகத்திலும், வாா்டு எண் 21, 22, 23, 24, 25 ஆகிய பகுதிகளுக்கு புதுராமகிருஷ்ணபுரம் மாநகராட்சிப் பள்ளியிலும், வாா்டு எண் 36, 37 ஆகிய பகுதிகளுக்கு முத்தணம்பாளையம் மாநகராட்சி வரிவசூல் மையத்திலும், வாா்டு எண் 42, 43, 44, 45 ஆகிய பகுதிகளுக்கு தாராபுரம் சாலை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அலுவலகத்திலும், வாா்டு எண் 56, 59, 60 ஆகிய பகுதிகளுக்கு ஆண்டிபாளையம் மண்டல அலுவலகத்திலும், வாா்டு எண் 46, 47, 48, 49, 50, 51 ஆகிய பகுதிகளுக்கு ராயபுரம் குடிநீா்த் தொட்டி பொறியாளா் பிரிவு அலுவலகத்திலும் செப்டம்பா் 21 ஆம் தேதி முகாம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com