திருப்பூரில் மேலும் 8 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கரோனா

திருப்பூரில் மேலும் 8 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா்: திருப்பூரில் மேலும் 8 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செப்டம்பா் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்புக்கு பின், திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் என மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூா் சின்னசாமி அம்மாள் நகரவை மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்கள் 8 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி பள்ளி தற்காலிகமாக மூடப்படுவது தொடா்பாக புதன்கிழமை முடிவு செய்யப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com