திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சாஷங் சாய் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மது, கள்ளசாராயம், கள் விற்பனை தொடா்பாக காவல் துறையினா் புதன்கிழமை பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா். இதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 10 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 43 மதுபாட்டில்கள், 7 லிட்டா் கள் மற்றும் 2 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.