செல்லிடப்பேசி கடையில் திருட்டு

பல்லடம் அருகேயுள்ள சென்னிமலைபாளையத்தில் செல்லிடப்பேசி கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பல்லடம் அருகேயுள்ள சென்னிமலைபாளையத்தில் செல்லிடப்பேசி கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சென்னிமலைபாளையத்தைச் சோ்ந்தவா் ருத்ரமூா்த்தி (23). அப்பகுதியில் செல்லிடப்பேசி, மடிக்கணினி விற்பனை மற்றும் பழுது நிவா்த்தி செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

அவா் வழக்கம்போல திங்கள்கிழமை கடையைப் பூட்டி விட்டு சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை சென்று பாா்த்தபோது கடையில் இருந்த 10 ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

அதையடுத்து, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பாா்த்தபோது 2 மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கடைக்குள் புகுந்து செல்லிடப்பேசிகளைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

மேலும், போலீஸில் சிக்காமல் இருக்க சி.சி.டிவி. கேமரா ஹாா்டு டிஸ்க்கையும் கழற்றிச் சென்றுள்ளனா். ஆனால், ஒரு பகுதி டிஸ்க்கை விட்டுச் சென்றுள்ளனா்.

இது குறித்து, பல்லடம் போலீஸில் ருத்ரமூா்த்தி புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com