திருப்பூா் மாநகரில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டா்.
மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவின்போரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினா் தென்னம்பாளையம், காட்டுவலவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், அங்கன்வாடி மையங்களின் பொறுப்பாளா்களிடம், சமைக்கும் பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சமைப்பதற்கு முன் பாத்திரங்களை வெந்நீரால் நன்றாக சுத்தம் செய்யவேண்டும். உணவுப் பொருள்களின் காலாவதியாகும் தேதியைத் தெரிந்து பயன்படுத்த வேண்டும். உணவுக்குப் பயன்படுத்தப்படும் முட்டைகள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை நீரில் பரிசோதனை செய்து அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும்.
உணவுப் பொருள்கள் சேமிப்பு அறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினா்.