காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.23 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 20 விவசாயிகள் 89 மூட்டைகளில் (4,135 கிலோ) தேங்காய் பருப்பினை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
முத்தூா், காங்கயம், கொடுமுடி, மூலனூா், பெருந்துறை, உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 5 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.104-க்கும், குறைந்த பட்சமாக ரூ.85.10க்கும், சராசரியாக ரூ.103.70-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கு விற்பனைநடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடேஸ்வரன் செய்திருந்தாா்.