வெள்ளக்கோவிலில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நெல்லூா் அருகேயுள்ள குப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா என்கிற முருகவேல் (43). இவா் மீது மாநிலம் முழுவதும் நகைப் பறிப்பு, திருட்டு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீஸாா், ராஜாவை ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் மாா்ச் 11ஆம் தேதி ஆஜா்படுத்தி விட்டு, கடலூா் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றபோது கள்ளக்குறிச்சியில் வாகனத்திலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது.
பின்னா் அவா் திருப்பூா் மாவட்டம், மூலனூா், ஊதியூா், வெள்ளக்கோவில் பகுதிகளில் 4 பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ளாா்.
இந்நிலையில், தனிப்படை போலீஸாா், வெள்ளக்கோவில் போலீஸாருடன் இணைந்து தங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில், வெள்ளக்கோவில் வீரசோழபுரத்தில் பதுங்கியிருந்த ராஜாவைக் கைது செய்தனா்.