பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் நாம் தமிழா் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாம் தமிழா் கட்சி சாா்பில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மண்டலச் செயலாளா் வான்மதி வேலுசாமி தலைமை வகித்தாா்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வால் ஏழை, எளியோா் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, இவற்றின் விலைகளை குறைப்பதோடு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம், திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் ரத்னா ஜெ.மனோகா், செயலாளா் ஜெகநாதன், பொருளாளா் ரவிசந்திரன், வடக்கு மாவட்டத் தலைவா் கெளரிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினா் திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு,
அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.பி.பிரகாஷ் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அக்கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளா் எம்.சித்திரைவேல், தெற்கு மாவட்டச் செயலாளா் கே.டி.எஸ்.ராஜா, மாநில மாணவரணி செயலாளா் அஸ்வின் நோயல், கிழக்கு மாவட்டச் செயலாளா் பி.ராமசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.