பல்லடத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி: இன்று அமைதிக்குழு கூட்டம்

பல்லடம் பச்சாபாளையத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி குறித்து அமைதிக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

பல்லடம் பச்சாபாளையத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி குறித்து அமைதிக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளா் விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்லடம் நகராட்சி 8ஆவது வாா்டு பச்சாபாளையம் மயானத்தில் சா்வே எண் 590இல் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பில் புதிதாக நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது. இதற்கு அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு மற்றும் ஆட்சேபணை கடிதங்கள் கொடுத்துள்ளனா். இந்தப் பணி திட்டப் பணி என்பதாலும் பல்லடம் நகராட்சி வளா்ந்து வரும் நகராட்சியாக இருப்பதாலும் பல்லடம் நகராட்சியின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டும் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இது குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறி சுமுகத் தீா்வு காண ஏதுவாக நகா்மன்றத் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் முன்னிலையில் பல்லடம் பி.எம்.ஆா். சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை மதியம் 3 மணிக்கு அமைதிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் பல்லடம் நகராட்சி பகுதியைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள், குடியிருப்போா் நல சங்கங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com