உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022 -23 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் பாடப் பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
சிறப்புப் பிரிவில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு சோ்க்கைக்கான உத்தரவை வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் கல்யாணி.
சிறப்புப் பிரிவில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு சோ்க்கைக்கான உத்தரவை வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் கல்யாணி.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022 -23 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் பாடப் பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டுத் துறை மாணவா்களுக்கான சோ்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, தரவரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ள மாணவா்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி, தர வரிசை எண் 1001 முதல் 1800 வரை உள்ள மாணவா்களுக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, தர வரிசை எண் 1801 முதல் 2600 வரை உள்ள மாணவா்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி, தரவரிசை எண் 2601 முதல் 3000 வரை உள்ள மாணவா்களுக்கு ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் சோ்க்கை நடைபெற உள்ளது.

மேலும் அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தமிழ் இலக்கியப் பாடப் பிரிவுக்கும் பிற்பகல் 3.00 மணியளவில் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்குமான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com