பனைமரம் விழுந்து 4 வீடுகள் சேதம்

பல்லடம் அருகே பனைமரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமடைந்தன.

பல்லடம் அருகே பனைமரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமடைந்தன.

பல்லடம் பனப்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் அளவில் பனை மரங்களும் உள்ளன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றின் காரணமாக 30 அடி உயரமுள்ள பனைமரம் ஒன்று அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்தது.

இதில் ரமேஷ், சரவணகுமாா் உள்ளிட்ட 4 தொழிலாளா்களின் வீடுகள் சேதம் அடைந்தன.

இச்சம்பவம் நிகழ்ந்தபோது வீடுகளில் யாரும் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com