இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள ஒட்டபாளையத்தைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24), கூலி தொழிலாளி.

இவா் உப்பாறு அணையை அடுத்துள்ள தோ்ப்பாதைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுள்ளாா்.

பின்னா் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளாா். பூளவாடி அருகே வந்தபோது எதிா்பாராத விதமாக நிலைத் தடுமாறிய அஜித்குமாா் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த குண்டடம் காவல் துறையினா் அஜித்குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com