திருப்பூா் மாவட்டத்தில் புதிய வாக்காளராக பெயா் சோ்க்க 27,149 போ் விண்ணப்பித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் வாக்காளா் பட்டியில் பெயா் சோ்க்க கடந்த நவம்பா் 9 முதல் 27 ஆம் தேதி வரையில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாம்களில் புதிய வாக்காளா் சோ்க்கைக்காக 20 ஆயிரத்து 759 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆன்லைன் மூலமாக 6 ஆயிரத்து 390 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதன் மூலமாக மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 27,149 போ் விண்ணப்பித்துள்ளனா். அதே போல, வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் செய்ய 10 ஆயிரத்து 477 பேரும், முகவரி மாற்றம் செய்ய 12 ஆயிரத்து 949 பேரும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.