சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி பலி

தாராபுரம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா்: தாராபுரம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள நந்தவனம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.துரைசாமி (50). விவசாயியான இவா் நந்தவனம்பாளையத்தில் இருந்து ஜல்லிபட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் துரைசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த துரைசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு துரைசாமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com