குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவா்

தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா் பங்கேற்கவுள்ளாா்.
சிக்கண்ணா  அரசு  கலைக் கல்லூரி  மாணவா்  பூபாலன்.
சிக்கண்ணா  அரசு  கலைக் கல்லூரி  மாணவா்  பூபாலன்.

தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா் பங்கேற்கவுள்ளாா்.

தில்லியில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள பாரதியாா் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரி மாணவா்களுக்கான தோ்வு கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபா் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில், 5 மாணவா்கள், 5 மாணவிகள் என மொத்தம் 10 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 மாணவா் பூபாலன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை வரலாறு படித்து வருகிறாா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் கூறுகையில், இந்தக் கல்லூரி தொடங்கி 56 ஆண்டுகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருந்து குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க 2ஆவது ஆண்டாக மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com