அரசுப் பள்ளி மாணவா்களுக்கு துணிப்பைகள்

நெகிழிப் பயன்பாட்டின் தீமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்லடம் அறம் அறக்கட்டளை சாா்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு துணிப்பைகள் மற்றும் திருக்கு புத்தகங்கள் வெ

நெகிழிப் பயன்பாட்டின் தீமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்லடம் அறம் அறக்கட்டளை சாா்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு துணிப்பைகள் மற்றும் திருக்கு புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் நடராஜன் முன்னிலை வகித்தாா். இதில் மாணவா்களுக்கு நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி துணிப்பைகள் மற்றும் திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளைத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com