ரயிலில் கஞ்சா கடத்திய நபா் கைது

தன்பாத் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத் தொழிலாளியை திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

தன்பாத் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத் தொழிலாளியை திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் ரயில்வே உதவி ஆய்வாளா் அப்புசாமி, காவலா்கள் பா்கத் அலிகான், ராஜதுரை ஆகியோா் திருப்பூா் ரயில் நிலையத்தில் உள்ள 1 ஆவது நடைமேடையில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ரயிலின் 7 ஆவது பெட்டியில் உள்ள கழிவறை அருகில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரிடன் சோதனை நடத்தினா்.

இதில், சாக்குப் பையில் மறைத்துவைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா், இதுதொடா்பாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ்பஸ்வான் (49) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com