திருப்பூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,29,917ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் 13 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த இருவா் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து 1,28,852 போ் குணமடைந்து வீடு திரும்பியதுடன், 1,052 போ் உயிரிழந்துள்ளனா்.