திருப்பூர்
பைக் மீது காா் மோதல்: இளைஞா் பலி
அவிநாசி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே தேவராயம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சரவணன் (28). இவா், தனது பிறந்த நாளுக்காக கேக் வாங்குவதற்கு அவிநாசிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி-மங்கலம் சாலை கருணைபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த காா், சரவணன் சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.